Monday, December 17, 2007

மழைக்காதலி!

திடீரென்று வந்துநிற்கும்
விருந்தினரைப் போல
கட்டியம் கூறாமலே
நிகழ்கிறது அவள் வருகை
எப்போதாவது
முத்தம் தரச் சம்மதிக்கும்
காதலியைப் போல!

மனித மனங்களில்
அவளின் வரவு
ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது.

நம்மை அலைக்கழிப்பதில்
ஏனோ அவளுக்கொரு
கிறக்கம்...

இதனாலேயே
அவளின் வருகைகூட
சில சமயங்களில்
ஆச்சரியத்தை
ஏற்படுத்துவதற்குப் பதிலாக
அதிர்ச்சியையே
நல்குகிறது நமக்கு.

எனினும்,
அவளின் கடைக்கண் பார்வை
தங்கள் மேல் விழாதா
என
காத்து நிற்கின்றன
இந்தத்
தரிசு நிலங்கள்.

No comments:

About Me

My photo
பெரிய கடவுள் அரிய தகவல்கள் (பிள்ளையார்), சுடர்விடும் சூப்பர்ஸ்டார் (திருமலை திருப்பதி), கிரிவலம் (திருவண்ணாமலை மகிமை), செல்வத்தை அள்ளித் தரும் லக்ஷ்மி குபேர பூஜை என்ற நான்கு புத்தகங்களை சந்திரசேகர சர்மா என்ற பெயரில் எழுதியுள்ளேன். இவை New Horizon Media Pvt Ltd. மூலம் வரம் வெளியீடாக வந்துள்ளது. தவம் வெளியீடாக ஸ்ரீராம நவமி மற்றும் திருப்பதி என இரண்டு புத்தகங்கள் சைதை முரளி என்ற பெயரில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திரிசக்தி பதிப்பகத்தில் இருந்து ‘நூறு வயது வாழ வேண்டுமா?’ - சித்தர்கள் சொல்லும் வாழ்வியல் ரகசியங்கள் என்ற நூலும் ‘சைதை முரளி’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.