Monday, December 18, 2006

பிரும்மரகசியம்!

சொல்வதற்கு எதுவுமில்லை
இனி உன்னிடம்.

சொன்னால்தான் காதல்
பூரணம் பெறும்
என்பதிலும் உடன்பாடில்லை
எனக்கு.

சொற்களால் மட்டுமே
புரியவைத்துவிட முடியாது
வாழ்க்கையை.

யாசித்துப் பெறுவதில் இல்லை
யோசித்துப் புரிதலில் உள்ளது
நேசம்.

உள்ள(த்)தை வெளிப்படுத்த
உனக்கு வெட்கமெனில்
எனக்கோ தயக்கம்.

உணர்வுப் பின்னல்கள்
உந்தித் தள்ள
அதன் வெளிப்பாடாய்
நிகழ்வதென்னவோ
செயல்களாலும்
செய்கைகளாலுமான
மெளன மொழி மட்டுமே.

எல்லாம் தெரிந்த சிவனும்
குமாரனிடம் மெளனமாக
பிரும்ம ரகசியம் கேட்டதை
யோசித்துப் பார்.

அவ்விதமாகவேனும்
காதலை
வெளிப்படுத்த
நீ தயார் எனில்,
ஒன்றும் தெரியாததுபோல
நானும்
அந்த பிரும்ம ரகசியத்தை அறிய
என் காதை
உன் உதட்டருகில்
கொண்டுவர
உத்தேசமாய் இருக்கிறேன்.

1 comment:

aara kavingan said...

தலைவா இது பிரும்ம ரகசியம் அல்ல... பீர்ரம்ம ரகசியமாக்கும்

About Me

My photo
பெரிய கடவுள் அரிய தகவல்கள் (பிள்ளையார்), சுடர்விடும் சூப்பர்ஸ்டார் (திருமலை திருப்பதி), கிரிவலம் (திருவண்ணாமலை மகிமை), செல்வத்தை அள்ளித் தரும் லக்ஷ்மி குபேர பூஜை என்ற நான்கு புத்தகங்களை சந்திரசேகர சர்மா என்ற பெயரில் எழுதியுள்ளேன். இவை New Horizon Media Pvt Ltd. மூலம் வரம் வெளியீடாக வந்துள்ளது. தவம் வெளியீடாக ஸ்ரீராம நவமி மற்றும் திருப்பதி என இரண்டு புத்தகங்கள் சைதை முரளி என்ற பெயரில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திரிசக்தி பதிப்பகத்தில் இருந்து ‘நூறு வயது வாழ வேண்டுமா?’ - சித்தர்கள் சொல்லும் வாழ்வியல் ரகசியங்கள் என்ற நூலும் ‘சைதை முரளி’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.