Monday, December 17, 2007

வாழு, வாழவிடு!

எதற்காகவும்
யாருக்காகவும்
காத்திருப்பதில்லை காலம்!

'வாழு, வாழவிடு'
என்ற வார்த்தைகளெல்லாம்
வழக்கொழிந்துபோய்
நீ வாழ
பிறரை வருத்தியெடு
என்றாகிவிட்டது
தற்போதைய வாழ்க்கை.

'வெள்ளத்தனைய மலர் நீட்டம்!'
என வெல்லமாகப் பேசும் சிலரும்
தங்கள் வாழ்வை மேம்படுத்தத்தான்
பேசிச்செல்கிறார்கள் என்பதை
உணர்வதில்லை கேட்கின்ற எவரும்.

உழைப்புக்கேற்ற ஊதியம் தராத
உழைப்புத் திருடர்களையும்
பிறர் உழைப்பிலேயே காலந்தள்ளும்
பிழைப்புத் திருடர்களையும்
கொண்டதாகத்தான் இருக்கிறது
சமூகம்.

'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்'
என்ற வள்ளுவ வாக்கினில் மதிப்பு வைத்து
நம் மதிப்பறிந்து நிமிர்ந்து நின்றால்
காலம் கைகோர்த்துவரும் நம்மோடு!

No comments:

About Me

My photo
பெரிய கடவுள் அரிய தகவல்கள் (பிள்ளையார்), சுடர்விடும் சூப்பர்ஸ்டார் (திருமலை திருப்பதி), கிரிவலம் (திருவண்ணாமலை மகிமை), செல்வத்தை அள்ளித் தரும் லக்ஷ்மி குபேர பூஜை என்ற நான்கு புத்தகங்களை சந்திரசேகர சர்மா என்ற பெயரில் எழுதியுள்ளேன். இவை New Horizon Media Pvt Ltd. மூலம் வரம் வெளியீடாக வந்துள்ளது. தவம் வெளியீடாக ஸ்ரீராம நவமி மற்றும் திருப்பதி என இரண்டு புத்தகங்கள் சைதை முரளி என்ற பெயரில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திரிசக்தி பதிப்பகத்தில் இருந்து ‘நூறு வயது வாழ வேண்டுமா?’ - சித்தர்கள் சொல்லும் வாழ்வியல் ரகசியங்கள் என்ற நூலும் ‘சைதை முரளி’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.