Monday, December 17, 2007

ஜடம்!

எதையும்
ஜடம் என்று கூறாதீர்கள்!

அதனுள்ளும் நடனமாடும்
அணுத்திரள்கள்.

நடைபிணம் என்றாலும்
கிடைபிணம் என்றாலும்
அதனுள்ளும் உண்டு
ஓர் இயக்கம்.

மூடிக்கொள்ள மறுக்கும்
கதவுக்குக்கூட
இருக்கலாம்
ஒரு பிணக்கம்.
அதை உணர்வதில்தான்
ஏனோ நமக்கு சுணக்கம்.

எனவே
ஜடம் என்று
எதையும் கூறாதீர்கள்...

No comments:

About Me

My photo
பெரிய கடவுள் அரிய தகவல்கள் (பிள்ளையார்), சுடர்விடும் சூப்பர்ஸ்டார் (திருமலை திருப்பதி), கிரிவலம் (திருவண்ணாமலை மகிமை), செல்வத்தை அள்ளித் தரும் லக்ஷ்மி குபேர பூஜை என்ற நான்கு புத்தகங்களை சந்திரசேகர சர்மா என்ற பெயரில் எழுதியுள்ளேன். இவை New Horizon Media Pvt Ltd. மூலம் வரம் வெளியீடாக வந்துள்ளது. தவம் வெளியீடாக ஸ்ரீராம நவமி மற்றும் திருப்பதி என இரண்டு புத்தகங்கள் சைதை முரளி என்ற பெயரில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திரிசக்தி பதிப்பகத்தில் இருந்து ‘நூறு வயது வாழ வேண்டுமா?’ - சித்தர்கள் சொல்லும் வாழ்வியல் ரகசியங்கள் என்ற நூலும் ‘சைதை முரளி’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.