நீயா, நானா?
பிடித்த வாழ்க்கையை
வாழ்ந்துவிடச் சொல்லி
அறிவு அறிவுறுத்துகிறது
சில சமயம்.
கிடைக்கும் வாழ்க்கையை
அனுபவித்துவிடக் கூறி
உணர்வு உந்துகிறது
பல சமயம்.
மின்னலைத் தொடர்ந்துவரும்
இடியாய்
சில சமயங்களில்
அறிவும்...
இடியைத் தொடர்ந்துவரும்
மழையாய்
பல சமயங்களில்
உணர்வும்...
நீயா, நானா?
என
வாழ்க்கைப் பாதையில்.
இவற்றில் எதைத் தேர்வது?
விடை புரியாத
கேள்வித்தாளாய்
சில சமயங்களிலும்
பல சமயங்களில்
விடை அறிந்தும்
பதிலிறுக்க முடியாதவண்ணம்
குழப்பத்தில் ஆழ்த்தி
கண்ணாமூச்சிகள் காட்டிடினும்
வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது
வாழ்க்கையை..!
Monday, October 30, 2006
Subscribe to:
Posts (Atom)
Blog Archive
About Me
- சைதை முரளி
- பெரிய கடவுள் அரிய தகவல்கள் (பிள்ளையார்), சுடர்விடும் சூப்பர்ஸ்டார் (திருமலை திருப்பதி), கிரிவலம் (திருவண்ணாமலை மகிமை), செல்வத்தை அள்ளித் தரும் லக்ஷ்மி குபேர பூஜை என்ற நான்கு புத்தகங்களை சந்திரசேகர சர்மா என்ற பெயரில் எழுதியுள்ளேன். இவை New Horizon Media Pvt Ltd. மூலம் வரம் வெளியீடாக வந்துள்ளது. தவம் வெளியீடாக ஸ்ரீராம நவமி மற்றும் திருப்பதி என இரண்டு புத்தகங்கள் சைதை முரளி என்ற பெயரில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திரிசக்தி பதிப்பகத்தில் இருந்து ‘நூறு வயது வாழ வேண்டுமா?’ - சித்தர்கள் சொல்லும் வாழ்வியல் ரகசியங்கள் என்ற நூலும் ‘சைதை முரளி’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.