பேச்சாளர் சிறப்புறப் பேசியும்
கைதட்ட இயலவில்லை
கையில் தேநீர் கோப்பை.
*******
கவனமுடன் உயிர்கொடுத்தான்
பலூனுக்கு
துப்பாக்கியால் சுடப்பட!
Monday, December 17, 2007
போதி மரம்!
கலர்களைக் காட்டி
கலா ரசிகனாக்கும்.
பொறுமையைப் போதிக்கும்
ஆசானாகத் திகழும்.
வன்மத்தைத் தூண்டும்
வழிகாட்டியாகவும் மாறும்.
சிந்தையைக் கிளறி
சிந்தனாவாதியாகவும் மாற்றும்.
இதுவும்
இதற்கு மேலும்கூட
(போ)பாதித்து நிற்கும்
மாநகரப் பேருந்திற்காக
நாம் காத்து நிற்கும்
பேருந்து நிறுத்தம்!
கலா ரசிகனாக்கும்.
பொறுமையைப் போதிக்கும்
ஆசானாகத் திகழும்.
வன்மத்தைத் தூண்டும்
வழிகாட்டியாகவும் மாறும்.
சிந்தையைக் கிளறி
சிந்தனாவாதியாகவும் மாற்றும்.
இதுவும்
இதற்கு மேலும்கூட
(போ)பாதித்து நிற்கும்
மாநகரப் பேருந்திற்காக
நாம் காத்து நிற்கும்
பேருந்து நிறுத்தம்!
வாழு, வாழவிடு!
எதற்காகவும்
யாருக்காகவும்
காத்திருப்பதில்லை காலம்!
'வாழு, வாழவிடு'
என்ற வார்த்தைகளெல்லாம்
வழக்கொழிந்துபோய்
நீ வாழ
பிறரை வருத்தியெடு
என்றாகிவிட்டது
தற்போதைய வாழ்க்கை.
'வெள்ளத்தனைய மலர் நீட்டம்!'
என வெல்லமாகப் பேசும் சிலரும்
தங்கள் வாழ்வை மேம்படுத்தத்தான்
பேசிச்செல்கிறார்கள் என்பதை
உணர்வதில்லை கேட்கின்ற எவரும்.
உழைப்புக்கேற்ற ஊதியம் தராத
உழைப்புத் திருடர்களையும்
பிறர் உழைப்பிலேயே காலந்தள்ளும்
பிழைப்புத் திருடர்களையும்
கொண்டதாகத்தான் இருக்கிறது
சமூகம்.
'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்'
என்ற வள்ளுவ வாக்கினில் மதிப்பு வைத்து
நம் மதிப்பறிந்து நிமிர்ந்து நின்றால்
காலம் கைகோர்த்துவரும் நம்மோடு!
யாருக்காகவும்
காத்திருப்பதில்லை காலம்!
'வாழு, வாழவிடு'
என்ற வார்த்தைகளெல்லாம்
வழக்கொழிந்துபோய்
நீ வாழ
பிறரை வருத்தியெடு
என்றாகிவிட்டது
தற்போதைய வாழ்க்கை.
'வெள்ளத்தனைய மலர் நீட்டம்!'
என வெல்லமாகப் பேசும் சிலரும்
தங்கள் வாழ்வை மேம்படுத்தத்தான்
பேசிச்செல்கிறார்கள் என்பதை
உணர்வதில்லை கேட்கின்ற எவரும்.
உழைப்புக்கேற்ற ஊதியம் தராத
உழைப்புத் திருடர்களையும்
பிறர் உழைப்பிலேயே காலந்தள்ளும்
பிழைப்புத் திருடர்களையும்
கொண்டதாகத்தான் இருக்கிறது
சமூகம்.
'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்'
என்ற வள்ளுவ வாக்கினில் மதிப்பு வைத்து
நம் மதிப்பறிந்து நிமிர்ந்து நின்றால்
காலம் கைகோர்த்துவரும் நம்மோடு!
ஜடம்!
எதையும்
ஜடம் என்று கூறாதீர்கள்!
அதனுள்ளும் நடனமாடும்
அணுத்திரள்கள்.
நடைபிணம் என்றாலும்
கிடைபிணம் என்றாலும்
அதனுள்ளும் உண்டு
ஓர் இயக்கம்.
மூடிக்கொள்ள மறுக்கும்
கதவுக்குக்கூட
இருக்கலாம்
ஒரு பிணக்கம்.
அதை உணர்வதில்தான்
ஏனோ நமக்கு சுணக்கம்.
எனவே
ஜடம் என்று
எதையும் கூறாதீர்கள்...
ஜடம் என்று கூறாதீர்கள்!
அதனுள்ளும் நடனமாடும்
அணுத்திரள்கள்.
நடைபிணம் என்றாலும்
கிடைபிணம் என்றாலும்
அதனுள்ளும் உண்டு
ஓர் இயக்கம்.
மூடிக்கொள்ள மறுக்கும்
கதவுக்குக்கூட
இருக்கலாம்
ஒரு பிணக்கம்.
அதை உணர்வதில்தான்
ஏனோ நமக்கு சுணக்கம்.
எனவே
ஜடம் என்று
எதையும் கூறாதீர்கள்...
சுகமான சுமைகள்...
சுமைகளும்
சுகமாகத் தோன்றும்
சுமக்கத் தெரிந்தோருக்கு...
கையில்
உளியைச் சுமந்தவன்
சிற்பியாகிறான்.
எண்ணத்தில்
தத்துவங்களைச் சுமந்தவன்
வேதாந்தியாகிறான்.
உயிர்களிடத்தில்
அன்பைச் சுமந்தவன்
ஞானியாகிறான்.
சுமைகளும்
சுகமாகத் தோன்றும்
சுமக்கத் தெரிந்தோருக்கு.
இமைகளும்
சுமையாகத் தோன்றும்
சோம்பிக் கிடப்போருக்கு!
சுகமாகத் தோன்றும்
சுமக்கத் தெரிந்தோருக்கு...
கையில்
உளியைச் சுமந்தவன்
சிற்பியாகிறான்.
எண்ணத்தில்
தத்துவங்களைச் சுமந்தவன்
வேதாந்தியாகிறான்.
உயிர்களிடத்தில்
அன்பைச் சுமந்தவன்
ஞானியாகிறான்.
சுமைகளும்
சுகமாகத் தோன்றும்
சுமக்கத் தெரிந்தோருக்கு.
இமைகளும்
சுமையாகத் தோன்றும்
சோம்பிக் கிடப்போருக்கு!
நாகரிக மாற்றம்..?
சாலையென்றும் பாராமல்
பைக்கில் சல்லாபத்தில்
செல்லும் காதல் ஜோடிகள்(?)
பொது இடங்களில்
மற்றவர் மனங்களில்
வன்மத்தைக் கிளறிவிடும்
வண்டின ஜோடிகள்(?)
இவர்களுடன்
பொது இடத்தில்
பின்புறக் கோவணத்தை
வலிந்து கட்டும் முயற்சியில்
சற்றுமுன் ஈடுபட்ட
வயல்வெளிப் பெரியவரும்...
நாகரிக மாற்றம் என்பது
வெட்கத்தை உதறுதல்தானோ?
பைக்கில் சல்லாபத்தில்
செல்லும் காதல் ஜோடிகள்(?)
பொது இடங்களில்
மற்றவர் மனங்களில்
வன்மத்தைக் கிளறிவிடும்
வண்டின ஜோடிகள்(?)
இவர்களுடன்
பொது இடத்தில்
பின்புறக் கோவணத்தை
வலிந்து கட்டும் முயற்சியில்
சற்றுமுன் ஈடுபட்ட
வயல்வெளிப் பெரியவரும்...
நாகரிக மாற்றம் என்பது
வெட்கத்தை உதறுதல்தானோ?
சில காதல் கவிதைகள்...
ஓ ஜீசஸ்!
விரும்பிச் சுமக்கும்
சிலுவை
காதல்!
*****
ஒளிரும் தீ!
உள்ளொளி பூரிப்பில்
ஒளிரும் தீ
காதல்!
காக்கும்
அதுவே
சாய்க்கவும்
செய்யும்
உணர்ந்து நெருங்கிடில்
காதலே நிம்மதி
உணராது நெருங்கிடிலோ
விலகிடுமே நிம்மதி.
*********
சரிப்படும்?
அது சரிப்படுமா
இது சரிப்பட்டு வருமா
என
முடிவெடுப்பதில்
வாழ்வை ஒத்திப்போடாமல்
எதார்த்தத்தை நினைவிலிருத்தி
சம்மதம் என்றொரு
வார்த்தை சொல்
சட்டென்று!
சீர்தூக்கிப் பார்த்து
செதுக்கிக் கொள்ளலாம்
வாழ்க்கையை!
********
நீ சிரித்தால்...
நீ சிரித்தால்
தீபாவளியாம்
இவர்கள் சொல்லுகிறார்கள்...
நீ இமைத்தாலுமே
தீபாவளிதான்
என்பது
இவர்களுக்கு எங்கே
தெரியப்போகிறது?
*********
வாழ்க்கை
கருவறையில் தொடங்கி
கல்லறையில் முடிகிறதாம்
மனித வாழ்க்கை!
ஆனால்
என் வாழ்க்கையோ
உன் சிரிப்பில்தான்
தொடங்குகிறது
பிறர் பார்த்து
நகைக்கும்படி
முடிகிறது.
********
வழுக்குப் பாறை!
கணநேர சறுக்கல்கள்
எனக்காகவா என
வழுக்கி விழுந்ததொரு
தருணம் பார்த்து
வியந்து கேட்டவளிடம்
எப்படி எடுத்துரைப்பேன்?
காதலும் ஒரு
வழுக்குப்பாறைதான்
என்பதை!
********
காதலின் நிலை!
வலியறியாமல்
விலகுவது
இங்கு
சாத்தியமில்லை.
அறியாமல் கேசச்சுருளில்
வந்து சிக்கிக்கொண்ட
ஈயின்
நிலையைப் போன்றதுதான்
நேசம் என்னும்
வலையில்
சிக்கிக்கொண்டுவிட்ட
காதலின் நிலையும்!
**********
தற்கொலை வேண்டாமே..!
தனித்துவம் எதற்கு
தற்கொலைக்கு?
உன் நினைவுகளே
நித்தமும் என்னைச்
சத்தமின்றிக் கொல்கையில்..!
*****
விரும்பிச் சுமக்கும்
சிலுவை
காதல்!
*****
ஒளிரும் தீ!
உள்ளொளி பூரிப்பில்
ஒளிரும் தீ
காதல்!
காக்கும்
அதுவே
சாய்க்கவும்
செய்யும்
உணர்ந்து நெருங்கிடில்
காதலே நிம்மதி
உணராது நெருங்கிடிலோ
விலகிடுமே நிம்மதி.
*********
சரிப்படும்?
அது சரிப்படுமா
இது சரிப்பட்டு வருமா
என
முடிவெடுப்பதில்
வாழ்வை ஒத்திப்போடாமல்
எதார்த்தத்தை நினைவிலிருத்தி
சம்மதம் என்றொரு
வார்த்தை சொல்
சட்டென்று!
சீர்தூக்கிப் பார்த்து
செதுக்கிக் கொள்ளலாம்
வாழ்க்கையை!
********
நீ சிரித்தால்...
நீ சிரித்தால்
தீபாவளியாம்
இவர்கள் சொல்லுகிறார்கள்...
நீ இமைத்தாலுமே
தீபாவளிதான்
என்பது
இவர்களுக்கு எங்கே
தெரியப்போகிறது?
*********
வாழ்க்கை
கருவறையில் தொடங்கி
கல்லறையில் முடிகிறதாம்
மனித வாழ்க்கை!
ஆனால்
என் வாழ்க்கையோ
உன் சிரிப்பில்தான்
தொடங்குகிறது
பிறர் பார்த்து
நகைக்கும்படி
முடிகிறது.
********
வழுக்குப் பாறை!
கணநேர சறுக்கல்கள்
எனக்காகவா என
வழுக்கி விழுந்ததொரு
தருணம் பார்த்து
வியந்து கேட்டவளிடம்
எப்படி எடுத்துரைப்பேன்?
காதலும் ஒரு
வழுக்குப்பாறைதான்
என்பதை!
********
காதலின் நிலை!
வலியறியாமல்
விலகுவது
இங்கு
சாத்தியமில்லை.
அறியாமல் கேசச்சுருளில்
வந்து சிக்கிக்கொண்ட
ஈயின்
நிலையைப் போன்றதுதான்
நேசம் என்னும்
வலையில்
சிக்கிக்கொண்டுவிட்ட
காதலின் நிலையும்!
**********
தற்கொலை வேண்டாமே..!
தனித்துவம் எதற்கு
தற்கொலைக்கு?
உன் நினைவுகளே
நித்தமும் என்னைச்
சத்தமின்றிக் கொல்கையில்..!
*****
மழைக்காதலி!
திடீரென்று வந்துநிற்கும்
விருந்தினரைப் போல
கட்டியம் கூறாமலே
நிகழ்கிறது அவள் வருகை
எப்போதாவது
முத்தம் தரச் சம்மதிக்கும்
காதலியைப் போல!
மனித மனங்களில்
அவளின் வரவு
ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது.
நம்மை அலைக்கழிப்பதில்
ஏனோ அவளுக்கொரு
கிறக்கம்...
இதனாலேயே
அவளின் வருகைகூட
சில சமயங்களில்
ஆச்சரியத்தை
ஏற்படுத்துவதற்குப் பதிலாக
அதிர்ச்சியையே
நல்குகிறது நமக்கு.
எனினும்,
அவளின் கடைக்கண் பார்வை
தங்கள் மேல் விழாதா
என
காத்து நிற்கின்றன
இந்தத்
தரிசு நிலங்கள்.
விருந்தினரைப் போல
கட்டியம் கூறாமலே
நிகழ்கிறது அவள் வருகை
எப்போதாவது
முத்தம் தரச் சம்மதிக்கும்
காதலியைப் போல!
மனித மனங்களில்
அவளின் வரவு
ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது.
நம்மை அலைக்கழிப்பதில்
ஏனோ அவளுக்கொரு
கிறக்கம்...
இதனாலேயே
அவளின் வருகைகூட
சில சமயங்களில்
ஆச்சரியத்தை
ஏற்படுத்துவதற்குப் பதிலாக
அதிர்ச்சியையே
நல்குகிறது நமக்கு.
எனினும்,
அவளின் கடைக்கண் பார்வை
தங்கள் மேல் விழாதா
என
காத்து நிற்கின்றன
இந்தத்
தரிசு நிலங்கள்.
Subscribe to:
Posts (Atom)
About Me
- சைதை முரளி
- பெரிய கடவுள் அரிய தகவல்கள் (பிள்ளையார்), சுடர்விடும் சூப்பர்ஸ்டார் (திருமலை திருப்பதி), கிரிவலம் (திருவண்ணாமலை மகிமை), செல்வத்தை அள்ளித் தரும் லக்ஷ்மி குபேர பூஜை என்ற நான்கு புத்தகங்களை சந்திரசேகர சர்மா என்ற பெயரில் எழுதியுள்ளேன். இவை New Horizon Media Pvt Ltd. மூலம் வரம் வெளியீடாக வந்துள்ளது. தவம் வெளியீடாக ஸ்ரீராம நவமி மற்றும் திருப்பதி என இரண்டு புத்தகங்கள் சைதை முரளி என்ற பெயரில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திரிசக்தி பதிப்பகத்தில் இருந்து ‘நூறு வயது வாழ வேண்டுமா?’ - சித்தர்கள் சொல்லும் வாழ்வியல் ரகசியங்கள் என்ற நூலும் ‘சைதை முரளி’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.