உறவுக் கோலம்...
பண்டிகை தினம்,
தெருவாசல் வரித்து
கோலம் போட்டிருந்தாள்
அம்மா.
மதிக்காது
மிதித்துச் சென்றோரால்
மனம் வருந்திய
என் பிள்ளை
சிறிதாகப் போட்டிருக்கலாமென்று
சிந்தனை உதிர்த்தான்.
’மிதித்தே பழகிய பாதங்கள்
பழகிப் போனதால்
வலியேதுமில்லை‘ என்றவளை
புரியாது பார்க்கிறான்...
புரிந்தது எனக்கு.
Saturday, January 12, 2008
Friday, January 11, 2008
எம்.எஸ்.
எம்.எஸ். கவிதாஞ்சலி - 2005-ல் எழுதியது.
நீ மறைந்ததாக யார் சொன்னது?
நீயே ஒரு சங்கீதம்!
எங்கள் நினைவுகளிலும் நீக்கமற
நிறைந்திருக்கும் உன் கீதம்.
பேரின்பம் என்பது வேறொன்றுமல்ல...
எம்.எஸ். என்ற
இரண்டெழுத்தின் தேவகானமே அது!
நீ மறைந்ததாக யார் சொன்னது?
நீயே ஒரு சங்கீதம்!
எங்கள் நினைவுகளிலும் நீக்கமற
நிறைந்திருக்கும் உன் கீதம்.
பேரின்பம் என்பது வேறொன்றுமல்ல...
எம்.எஸ். என்ற
இரண்டெழுத்தின் தேவகானமே அது!
Subscribe to:
Posts (Atom)
Blog Archive
About Me
- சைதை முரளி
- பெரிய கடவுள் அரிய தகவல்கள் (பிள்ளையார்), சுடர்விடும் சூப்பர்ஸ்டார் (திருமலை திருப்பதி), கிரிவலம் (திருவண்ணாமலை மகிமை), செல்வத்தை அள்ளித் தரும் லக்ஷ்மி குபேர பூஜை என்ற நான்கு புத்தகங்களை சந்திரசேகர சர்மா என்ற பெயரில் எழுதியுள்ளேன். இவை New Horizon Media Pvt Ltd. மூலம் வரம் வெளியீடாக வந்துள்ளது. தவம் வெளியீடாக ஸ்ரீராம நவமி மற்றும் திருப்பதி என இரண்டு புத்தகங்கள் சைதை முரளி என்ற பெயரில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திரிசக்தி பதிப்பகத்தில் இருந்து ‘நூறு வயது வாழ வேண்டுமா?’ - சித்தர்கள் சொல்லும் வாழ்வியல் ரகசியங்கள் என்ற நூலும் ‘சைதை முரளி’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.