ஒருமுறை சுனாமி வந்த பாதிப்பிலிருந்தே மக்கள் இன்னமும் மீளாதிருக்கிறார்கள். இந்நிலையில் மீண்டும் சுனாமி வரலாம் என்று அவ்வப்போது கூறி கலவரப்படுத்தும் நிலையும் நிலவி வருகிறது. இது குறித்துச் சிந்தித்ததில் தோன்றியது இந்தக் கவிதை!
ஆழிப் பேரலையின்
ஊழித் தாண்டவமே
இங்கு
யார்மீது உன் கோபம்?
பொறுமைக்குப் பேர் போனவள்
என்ற புகழுரை
உனக்குப் பிடிக்கவில்லையோ?
எங்கள்மீது உள்ள அன்பினால்தான்
நாங்கள் செய்யும் அத்துனை அத்துமீறல்களையும்
பொறுத்துப போன நீ,
முடியாத கட்டத்தில்
அவ்வப்போது நிலநடுக்கம்
என்ற ஒன்றாகத் தோன்றி
எங்களை நடுங்க வைத்துக்கொண்டிருந்தாய்.
சுனாமியே!
மண்ணின்(ல்) மைந்தர்கள்
செய்யும் அட்டூழியம்
தாங்கவில்லையென்று
எங்கள் தாய் உன்னிடம் வந்து
அழுது முறையிட்டனளோ?
நீயும் உடன்
எந்தவொரு முன்னறிவிப்புமின்றி
கொடுங்கோலனாய்ச் சீறி எழுந்து
லட்சக்கணக்கில் உயிர்களைக்
கொள்ளை கொண்டனையோ?
தாயாக நீ இருந்தாலல்லவா
எங்களின் தவிப்பும் வேதனையும்
உனக்குப் புரிந்திருக்கும்.
நீதான்
பேயாக மாறிவிட்டிருக்கிறாயே!
எதையும் அரசியலாக்கும்
எங்களின் புத்தி
இனி ஒருபோதும்
உங்களுக்குள் வேண்டாம்.
சுனாமியே!
இனி ஒருபோதும் வேண்டாம்
உங்களுக்குள்
இதுபோன்றதொரு இலவசக் கூட்டணி!
- சைதை முரளி.
Monday, November 20, 2006
Subscribe to:
Post Comments (Atom)
Blog Archive
About Me
- சைதை முரளி
- பெரிய கடவுள் அரிய தகவல்கள் (பிள்ளையார்), சுடர்விடும் சூப்பர்ஸ்டார் (திருமலை திருப்பதி), கிரிவலம் (திருவண்ணாமலை மகிமை), செல்வத்தை அள்ளித் தரும் லக்ஷ்மி குபேர பூஜை என்ற நான்கு புத்தகங்களை சந்திரசேகர சர்மா என்ற பெயரில் எழுதியுள்ளேன். இவை New Horizon Media Pvt Ltd. மூலம் வரம் வெளியீடாக வந்துள்ளது. தவம் வெளியீடாக ஸ்ரீராம நவமி மற்றும் திருப்பதி என இரண்டு புத்தகங்கள் சைதை முரளி என்ற பெயரில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திரிசக்தி பதிப்பகத்தில் இருந்து ‘நூறு வயது வாழ வேண்டுமா?’ - சித்தர்கள் சொல்லும் வாழ்வியல் ரகசியங்கள் என்ற நூலும் ‘சைதை முரளி’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.
3 comments:
வெற்றிக்கு வாழ்த்துக்கள்!!
மறுமொழி மட்டுறுத்தல் செய்யுங்க
வாழ்த்துக்கு நன்றி, ரவி!
Post a Comment