Monday, November 20, 2006

விடுதலை?

சிறு வித்து ஒன்றினுள்
விஸ்வரூப வளர்ச்சிக்கான
பரிணாமம் மறைந்திருப்பதும்,

பட்டாம்பூச்சி மனிதர்கள்
பாழாய்ப்போன காதலினால்
பரிதவித்து முடங்குவதும்,

மெழுகுவர்த்தியாய் உழைத்தும்
மெர்க்குரிப் பிரகாசமாய்
வாழ்க்கை அமையாதிருப்பதும்,

இலட்சியங்களால் நிரம்பியிருப்பவனை
அறிவிப்பேதுமின்றி காலன்
துணைக்கழைப்பதும்

புரியாத புதிர்களெனில்...

நிலையான அரசைத் தருவார்களென்ற
நப்பாசையில்
வாக்களிக்கும் மக்களுக்கு
வாய்க்கரிசி போட்டு
வருஷத்துக்கொருமுறை
தேர்தலைக் கொண்டுவரும்
வேசியவாதிகளின் அரசியல்...

குருவி தலையில் பனங்காயாய்
குடிகளுக்கு என்றும்
புரிந்தும் புரியாத புதிர்தான்!


- சைதை முரளி.

No comments:

About Me

My photo
பெரிய கடவுள் அரிய தகவல்கள் (பிள்ளையார்), சுடர்விடும் சூப்பர்ஸ்டார் (திருமலை திருப்பதி), கிரிவலம் (திருவண்ணாமலை மகிமை), செல்வத்தை அள்ளித் தரும் லக்ஷ்மி குபேர பூஜை என்ற நான்கு புத்தகங்களை சந்திரசேகர சர்மா என்ற பெயரில் எழுதியுள்ளேன். இவை New Horizon Media Pvt Ltd. மூலம் வரம் வெளியீடாக வந்துள்ளது. தவம் வெளியீடாக ஸ்ரீராம நவமி மற்றும் திருப்பதி என இரண்டு புத்தகங்கள் சைதை முரளி என்ற பெயரில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திரிசக்தி பதிப்பகத்தில் இருந்து ‘நூறு வயது வாழ வேண்டுமா?’ - சித்தர்கள் சொல்லும் வாழ்வியல் ரகசியங்கள் என்ற நூலும் ‘சைதை முரளி’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.